Saavi
1947-ம் வருஷம் ஜனவரி மாதம். கல்கி காரியாலயத்தில் என் மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன்.'ஆசிரியர் கூப்பிடுகிறார்!' என்று ஆபீஸ் பையன் வந்து அழைத்தான்.பேனாவை அப்படியே மேஜை மீது வைத்து விட்டு ஆசிரியர் இருந்த அறைக்குப் போனேன்.ஒரு நிமிஷம் ஆசிரியர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். 'நவகாளிக்குப் போய் வருகிறீரா?' என்று சற்று தயக்கத்துடனேயே கேட்டார்.