Nara. Nachiappan
'முயல் குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளை வெளேரென்று பனி நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கண்களும் காதுகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அது துள்ளிப் பாயும் போது மின்னல் பறப்பது போல் இருக்கும். அவ்வளவு வேகமாகப் பாயும்.இவ்வளவு அழகான பத்து முயல் குட்டிகளை வைத்து திரு. நாரா நாச்சியப்பன் உங்களுக்கு இங்கே பத்துக் கதைகளை எழுதித் தந்திருக்கிறார்.பத்தும் பத்து விதமான கற்பனை. படிக்கப் படிக்கச் சுவையூட்டும் மிக விந்தையான இந்த முயல்கள், உங்கள் மனத்தை விட்டுப் போகா.