Nara. Nachiappan
சிட்டுக்குருவிகள் யாருக்கும் தொல்லை கொடுக்காதவை. பார்க்க அழகானவை. அவை வால் வெட்டிப் பறக்கும் போதும், குந்தும் போதும், இரை கொத்தும் போதும், நடக்கின்ற நாடகம் கண்ணுக்கு விருந்து சலிப்புத் தராத நல்ல பொழுது போக்கு. சிட்டுக் குருவிகளைப் பார்க்கின்ற போதே நம் உள்ளத்தில் ஒரு துள்ளல் ஏற்படுகிறது. சிறு பிள்ளைகள் துறு துறு வென்று இருந்தால் சிட்டுக்குருவி போல் இருக்கிறான் என்று சொல்லுவார்கள். சிட்டுக் குருவிகளின் செயல்களைச் சுவைத்துச் சுவைத்துப் பாவேந்தர் பாரதிதாசன் பல பாடல்கள் எழுதியுள்ளார். இப்படிப்பட்ட சிட்டுக் குருவிகளை வைத்து இங்கே ஐந்து கதைகள் எழுதியிருக்கிறேன்.